பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.திருக்குருகை மான்மியம்




பூத்தா தாமரையயன் படைக்கப் பொற்புடைக்
கூத்த னாகியசிவன் துடைக்கும் கொள்கைசேர்
ஏத்துநற் கரியபல் லுலகை இன்புறக்
காத்தமால் குருகைமான் மியத்தைக் காக்கவே

இவ்வாறு மூவரையும் குறிப்பிடுதல் இவரது சமரச மனப்பான்மையைக் காட்டுகிற ஒரு நல்லியல்பு, பின்னரும் 'பரகபாணியனும் அயனுமாம் சொரூபம் பயின்ற கேசவன்' (293) என்று கூறுவர். தம் குருநாதரை 'ஆரியனென எதிர்த்து அரிய பேதைமையும் நீக்கியோன்' (3) என்று குறிப்பிடுவர். பதிகம் என்ற பகுதி கடவுள் வாழ்த்தின் பின் 17 பாடல்கள் கொண்டது. எனினும் இதன் முதல் 10 பாடல்கள் காப்புடன் சேர்ந்து பாயிரம் என்னத் தக்கவை. இப்பகுதியின் முதல் பாடலில் இவர் சொல்லும் கருத்து, சைவ சமயத்தில் எங்கும் சொல்லப் பெறும் கருத்தையொத்துள்ளது.

பூவாகிநறு மணமாய்ப் பொன்னாகி யும்ஒளியாய்ப்
பாவாகியும் இசையாய்ப் பாலாகி யுஞ்சுவையாய்
மேவா ருயிர்க்குயிராய் வேறுவே றாகிநின்ற
மூவா முழுமுதலின் மூத ரறிவாரே

இதனை, பின்வரும் சிவகாம சுந்தரி துதியுடன் ஒப்புநோக்கி உணர்க (வேறு புராணப் பாடல்):

சொற்பொருளும் உடலுயிரும் சுடரொளியும்
விரைமலரும் சுவையும் பாலும்
நிற்கும் நிலை எனத்தெளிந்து சிவத்தில்
அனன்னிய மாகி.

இவர்கூறும் அடியார் வணக்கம் சிறப்பானது.

கடியார் பசுந்துளவக் கார்மேனிச் செங்கண்
நெடியானை எட்டெழுத்தாய் நின்றானைப் புள்ளின்
கொடியானை என்னுளத்துட் கொண்டானை ஏத்தும்
அடியார் அடியார் அடியார் அடியேனே.

என்பது காண்க. இப்பகுதியில் பல பாடல்கள் குருகையில் உள்ள

71