பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை-பு-இ-திருக்குருகை மான்மியம்




போத மேதகப் பூரணன் பூமகள்
நாத வானெனக் கண்டவர் மாளிகை
வேத வாய்மையும் மெய்த்தமிழ் வாய்மையும்
கீத வாய்மையும் கிள்ளை மிழற்றுமே (462)

அடுத்து, கோயில் வருணனை' என்ற சருக்கத்தில் ஒலியின் பிறப்பு என்று தொடங்கி, வாக்கு, எழுத்து, சொல், பொருள், அகம், புறம், வெண்பாமாலை, படலம், ஈராறு, யாப்பு,அலங்காரம், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பது முடியக் கூறி திருப்புளி வருணனையோடு நிறைவு செய்கின்றார். அடுத்த சருக்கத்தில் சந்தப் பாடல்களும் மடக்கும் அதிகமாக அமைத்துள்ளார்; நூலெங்குமே சந்திப் பாடல்களைக் காணலாம். பரமபத வருணனையில் பரமபதநாதன் அமைந்துள்ள தோற்றம் பத்துப் பாடல்களால் பாங்குற வருணிக்கப் பெறுகின்றது. அங்குள்ள மரங்களைக் கூறும்போது நான்கு பாடல்களில் அடைமொழி இல்லாமலே கூறுவது சுவைபட உள்ளது (719-722).

தில்லியம் பரிசாதம் தேவதாரம் மந்தாரம்
சல்லிய கரணிசாலி சந்தகில் ஒமைகாட
வல்லிமல் விகைஅசோகு வலம்புரி மாழை வாழை
நெல்லிவெண் நாவல்பூவை ஞாழல்ஏலந் தற்கோலம்,

மாதவி சூரல்வேரல் மராமரம் பலவுகொன்றை
சூதம்.ஆம் பிரம்பலாக தோன்றிலா தளைஇருப்பை
தாதகி நாளிகோந் தணக்கில வங்கங்கன்னல
கேதகை குல்லைமுல்லை கிஞ்சுக மால்லம்வில்வம்.


வன்னிகுற் குறுக்கொ ழுந்து
மகிழிரு வேரி வெள்ளில்
கன்னிகா ரங்கு ருந்து
கடுகநீ தகிசெ ருந்தில்

73