பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்




பன்னிபுன் னாகம் பூகம்
பாதிரி நமைவெட் பாலை
சன்மலி பகன்றை பூல்வேற்
காமரா விரைமஞ் சட்டி

கடம்புகா ரத்துத் தாலங்
களங்கருங் காலி சீந்தி
அடம்பர சாச்சா வெட்சி
அழிஞ்சில்சீ ரகம்உ ழிஞ்சில்
வடந்தரா எலுமிச் சிஞ்சி
அரிசன மாஞ்சி யென்றே
இடம்பயின் றனவா யேனை
யவற்றோடு மெண்ணின் றாயே.

அண்ட உற்பத்திச் சருக்கம், புராண லட்சணம் என்பதற்கேற்ப உலகத் தோற்றத்தை உரைக்கின்றது. நரகத்தைக் கூறுமிடத்து என்னென்ன பாவம் செய்தோர் நரகில் உழல்வார் என்பது 40 பாடல்களால் கூறப்பெறுகின்றது. அகம்பிரமம் என்பவரும் இத்தீவினையால் நரகத்தில் உள்ளனர்.

மிக முயன்று எழுதி வைத்த ஏடுகளைத் திருடுவோர், கற்றிடாததையும் கற்றதாய் மேற்கொண்டு உரைப்பவர், குருத்துரோகிகள், வயிற்றுக்காகக் கவிபாடி பின் கவிஞர்கள் என்று பெயர் வாங்கினோர் - இவர்கள் போன்றவரும் நரகில் உள்ளனர்.

கடவுளா மெனவே குரவரை மதித்துக்
களைகணாக் கற்றநூல் பனைமா
மடல்களிற் கரமு மெருத்தமும் பாடும்
வழுந்தவே கங்குலும் பகலும்
சுடர்நுதி வயிர ஆசியாற் பொறித்துத்
தொகுத்தபொத் தகங்களைக் கரவிற்
படரிரு ளிடைக்கன் னுவிற்கவர் பவராய்ப்
படுவழி படைத்தபா தகத்தோர் (987)

74