பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்


பதின்மர் பாடலுக்குமுன்
பதிக மாகவே
புதுவை யாசிரியனார்
புகல்பல் லாண்டுதான்
மதுரைமா நகர்தனிற்
பிறந்த வாய்மையால்
இதனை நேர்தவம்
நிலத்து இயம்ப வல்லமோ?

காலம்: ஆசிரியரைக் குறித்த செய்திகள் கூறப் பெறாமை போலவே காலத்தைப் பற்றிய குறிப்போ, சிறப்புப் பாயிரமோ, அரங்கேற்றிய காலமோ சொல்லப் பெறவில்லை. இவர் ஆழ்வார் அனைவரையும் கூறுவதாலும், ஆசாரியருள் எம்பெருமானார் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டின் பிற்பாதிக்கும் பிற்பட்டவர் என்பது தெளிவு.

புராணத் திருமலை நாதர் மதுரையிலிருந்தே (கி.பி.1508), ஒரளவு அவரையும் புராணம் பாடியதையும் நேரில் அறிந்திருந்ததாலுமே கூடற்புராணத்தைத் தாம் முற்கூறியவாறு பாடினார் என்பது திரு. மு. அருணாசலம் அவர்களின் கருத்து. மேலும் இருவருக்கும் கால இடையீடு அதிகம் இருக்க முடியாது என்றும், சுமார் 50 அல்லது 75 ஆண்டுகளே இருந்திருக்கலாம் என்றும் அவர் கருதுவர். எனவே கூடற்புராணம் பாடிய காலம் 1575-1600க்குள் இருந்திருக்கும் என்று உறுதிப்படுத்துவர்.

16-ஆம் நூற்றாண்டு சைவத்திலும் வைணவத்திலும் புராணங்கள் மிக அதிகமாகத் தோன்றிய காலம். பொருளால் மட்டுமின்றி புராணத்தின் நடையாலும் இது பிந்திய நூலாக முடியாது. இந்த நூற்றாண்டுக்கே உரியதென்று கருதத் தோன்றுகின்றது.

நூற்பொருள்: இப்புராணம் பாயிரப் பகுதி, கிருத காண்டம், ரேத காண்டம், துவாபர காண்டம், கலி காண்டம் என்ற ஐந்து பகுதிகளாக உள்ளது. பிந்தைய நான்கும் யுகங்களின் பெயர்கள். பாடல் 757 பாயிரப் பகுதியுள் கடவுள் வணக்கம், புராண வரலாறு, ஆற்றுப் படலம்,நாட்டுப் படலம், நகரப்படலம் என்ற பிரிவுகள் உள்ளன.

80