பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வ.உ.சி.



ஆதிக்கக்காரர்களின் ஆத்திரத்துக்குள்ளானவர் வ. உ. சி. விடுதலை விரும்பிகளின் அபிமானத்துக்கு ஆளானவர் வ.உ.சி. ஒய்ந்து கிடந்த தமிழகத்தில் விடுதலைப்புரட்சிச் சுவாலையாக ஒளிர்ந்தவர் சிதம்பரம் பிள்ளை.

இளமை வாழ்க்கை

தமிழ் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக் காலகட்டத்தோடு சிதம்பரம் பிள்ளையின் இளமை தொடர்புடையது. பிரிட்டிஷ் அதிகாரத்திற்கும், ஆணவ மிரட்டலுக்கும் அஞ்சி, உயிர்ப்பு ஒடுங்கித் தமிழக மக்கள் செயலற்றிருந்த காலம். பிரிட்டிஷ் துப்பாக்கிகளுக்கும், சிறைக் கூடங்களுக்கும், தாக்குமரங்களுக்கும் பயந்து இந்திய மக்கள் சோர்வுற்றிருந்த காலம், பிரிட்டிஷ் சுரண்டல்காரர்கள் நமது செல்வத்தைக் கொள்ளை கொண்டு சென்றார்கள். நமது மக்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தார்கள். அடிமைகளாக உழல்வதைத் கவிர வேறு வழியின்றித் தமிழ் மக்கள் நடைபினங்களாகத் திரிந்தார்கள்.

இந்நிலையைப் பாரதி ‘போகின்ற பாரதம்’ என்ற பாடலில் வருணிக்கிறார். தேசத்தை மனிதனாகக் கற்பனை செய்து, அம்மனிதனது அவல நிலையை விளக்கி, அவனை ‘போ’ என்று விரட்டுவதாகக் கூறுகிறது ‘போகின்ற பாரதம்’. பாரதி அடிமைத்தனத்தை வெறுத்துப் போராடாத பாரதத்தைக் கடித்து, அதன்மீது வெறுப்பை உமிழ்கிறார்

போகின்ற பாரதம்
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறியிழந்த விழியினாய் போ போ போ
ஒலியிழந்த குரலினாய் போ போ போ
ஒளியிழந்த மேனியாய் போ போ போ
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மையென்றும் வேண்டுவாய் போ போ போ
இன்றுயார தத்திடை நாய்போலே
ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ
நன்றுகூறில் அஞ்சுவாய் போபோ போ
நாணிலாது கெஞ்சுவாய் போ பேர் போ