பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வ.உ.சி.


11 கம்பேனிக்குக் கிடைக்கும் லாபத்தொகையில் கம்பேனிக்கு ரிசர்வ் பண்டாக வைத்துக் கொண்டது போக மீதத் தொகையைப் பங்காளிகளுக்கு அவர்கள் பங்கு வீதாசாரப்படி பகுந்து கொடுக்கப்படும்.

12 கம்பேனியின் விதிகளடங்கிய புத்தகமும், மிமோரண்டமும் அப்ளிக்கேஷன் பாரங்களும் தூத்துக்குடி கம்பேனி ஆபீசிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். விதிகளடங்கிய புத்தகம் மிமோரண்டம் இவைகளின் கிரயம் ரூ 0–8–0.

13 சகல கரஸ்பாண்டன்ஸ்களும், அப்ளிக்கேஷன்களும் மனியாடர்களும் தூத்துக்குடியிலிருக்கும் கம்பேனியில் செக்ரட்டேரி அல்லது அசிஸ்டெண்டு செக்ரட்டேரியர்களுக்கு அனுப்பவேண்டும்.

14 சுமார் 25,000 பங்குகள் வரை இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்னும் அப்ளிக்கேஷன் விரைவாக வந்துகொண்டேயிருக்கின்றன. தேசாபிமானமுள்ள இந்தியா, இலங்கை முதலிய ஆசியா கண்டத்துத் தேச கனவான்கள் கம்பேனியில் அதிகப் பங்குகள் எடுத்துதவிபுரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.

தூத்துக்குடி,

எஸ். டி. கிருஷ்ணய்யங்கார்,

24-9-07.

கெளரவ காரியதரிசி