இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
வ. உ. சி.
1919 | மார்ச்சு — ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த சத்தியாகிரகத்தையொட்டி காந்திக்கு ஆதரவு தந்தார்; காந்தியைச் சென்னையில் வரவேற்றுப் பேசினார். | |
டிசம்பர் — சென்னை வந்திருந்த திலகருடன் சந்திப்பு. திலகர் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்திருந்தது குறித்து மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். அதனால் அந்த இயக்கத்தில் சேராதிருந்தார். | ||
1920 | கல்கத்தா காங்கிரசில் கலந்து கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்துக் காங்கிரசிலிருந்து விலகினார். கோவை வாசம். | |
1924 | வழக்கறிஞர் பணி செய்ய இருந்த தடை நீங்கி, சன்னது பெற்றுக் கோவில்பட்டியில் குடியேறினார். நெல்லை மாவட்டத்தில் நுழையக்கூடாது என்ற தடையும் நீங்கியது. | |
ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்றவுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார், சேலம் மாவட்ட அரசியல் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்தினார். ஆயினும் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்ளவில்லை. | ||
1933 | காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதும் அவரது அரிசனச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காந்தி தமிழகம் வந்தபோது காரைக்குடியில் அவரை வரவேற்க நடந்த ஏற்பாட்டுக் கூட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கினார். | |
1934 | திருச்செந்தூரில் வ.உ.சி.யின் திருக்குறள் உரை வெளியிடப்பட்டது. | |
1935 | அப்போது காங்கிரசின் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் தென்னிந்தியச் சுற்றுப் பயணத்தின்போது தூத்துக்குடி சென்று வ.உ.சி.யைச் சந்தித்து மரியாதை செய்தார். | |
1936 | நவம்பர் 18—மறைவு. |