பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

83


அதிலே கூறப்பட்டுள்ள ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவர் பெருமானது கருத்தை ஆழ்ந்து ஊன்றிப் படித்தவர் என்பதின் எதிரொலியாக வாழ்ந்தவர்!

தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரும் ஓர் ஐயர் அவர் சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடியவர். கவிதையிலே வீர முழக்கமிட்டவர். பிராமணர் என்று அடையாளம் காட்டிடும் முப்புரிநூலை அதாவது பூணுலைக் கழற்றி கனகலிங்கம் என்ற ஒரு புதுச்சேரி தாழ்த்தப்பட்டவருக்குப் போட்டு சாதி ஆதிக்க உணர்வை சாடிய கவிஞர் அவர்!

வ.வே.சு.ஐயரின் அரசியல் குரு நாதரான சாவர்கர், வைதீக மத்தின் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உயில் எழுதி வைத்து விட்டு, அதன்படியே எனது பிணத்தை எடுக்கவேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையாளராகச் செத்தார்!

ஆனால், என்ன காரணத்தினாலோ வ.வே.சு. ஐயர் பரத்துவாசர் என்ற ஆசிரமத்தில் எல்லா ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

அதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பெரிய கலவரமே, தகராறே உருவானது. தந்தை பெரியார், டாக்டர் வரதராசுலு நாயுடு போன்ற சுயமரியாதைக்காரர்கள், காங்சிரசில் இருந்து கொண்டே வ.வே.சு. ஐயரின் போக்குக்குச் சாதிவெறி என்ற பெயரைச் சூட்டி ஐயரைப் பலமாக எதிர்த்துக் கண்டனம் செய்தார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஐயர் ஆசிரமத்திற்கு வழங்கிய ஐயாயிரம் ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் என்று தகராறை எழுப்பினார்கள். மேற்கொண்டு கொடுப்பதாக வாக்களித்திருந்த மற்ற ஐயாயிரம் ரூபாயைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/85&oldid=1084000" இலிருந்து மீள்விக்கப்பட்டது