பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

ஹிராடெடஸின்



இந்தியத் தெய்வங்களான இராமர், கிருஷ்ணர், சூரியன், இந்திரன் ஆகியவர்களின் குணச் சக்திகள் ஒன்று சேர்ந்த ஒரு கலப்புக் கடவுளாக அப்பொலோ தெய்வம் உருவாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குரோசஸ், அப்பொலோ கடவுளிடம் ஆழ்ந்த பக்தியுடையவர். அதனால்தான் அவர் சிதையிலே படுத்துப் பிரார்த்தனை செய்ததும், அந்தத் தெய்வம் கருணை கொண்டு மழையைப் பொழிந்தார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது நமது முதுமொழி அல்லவா? பாஞ்சாலி பாரதத்தில் துகிலுரியப்பட்டபோது, அவள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூவி முறையிட்டபோது துச்சாதனால் அவிழ்க்கப்பட்ட சேலை வளர்ந்து கொண்டே இருக்கவில்லையா!

பாரசீகப் பேரரசின் அரசர்களுள் ஒருவரான அஸ்டியகெஸ் கண்ட ஒரு கனவிற்கு, தம்பேரன் ஆசியாவின் சக்கரவர்த்தியாக வருவான் என்ற விளக்கம் தரப்பட்டது. ஆகவே, அந்தக் குழந்தையைக் கொன்று விடும்படி ஹர்பகஸ் என்ற தனது தளபதிக்குக் கட்டளையிட்டான். அதாவது, பாரதக் கதையில் கம்சன் கிருஷ்ணன் தனக்கு எதிரி என்று அசரீரி கூறிய வாக்குக்கேற்றவாறு அவன் நாட்டில் பிறக்கும் குழந்தைகளைக் கொல்லுமாறு உத்தரவிட்டதைப் போல.

இயேசு பெருமான் பிறந்த போது இரண்டாயிரம் குழந்தைகளை யூத நாட்டிலே கொன்றதைப் போல இந்தச் சம்பவங்கள் எல்லாம் அஸ்டியகசுக்குப் பின்னாலே நடந்த சம்பவங்களாகும். ஆனால், இவற்றுக் கெல்லாம் மூலக் கருவாக அகஸ்டியஸ் வழிகாட்டினான் என்றே நினைக்க வேண்டியுள்ளது.

ஹர்பகஸ் என்ற தளபதி அஸ்டியகஸ் கட்டளைப்படி இறந்த ஒரு குழந்தையை ஆட்டிடையனிடம் பெற்று, அதை ஒரு கூடையில் வைத்து மூடி, படகில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டுவிட்டான்.