பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஹெர்க்குலிஸ்


ஆறடிக்குமேல் உயரமாயும், உலகிலேயே மிகப் பெரியவனாயும் ஒரு வீரன், ஒரு தோளிலே வில்லும், வலக்கரத்திலே ஒரு கதையும் தாங்கி, வீதி வழியாக அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தான் என்பதைக் காவலர் முன்னதாகவே மன்னனுக்குத் தெரிவித்திருந்தனர். ‘கதை’ என்ற சொல்லிலிருந்து வருகின்றவன் ஹெர்க்குலிஸ்தான் என்று அவன் தெரிந்து, தன்னைச் சுற்றிலும் பலசாலிகளான பல வீரர்களை நிற்க வைத்துக் கொண்டு. அவன் தன் கொலுமண்டபத்தில் விற்றிருந்தான்.


ஹெர்க்குலிஸ் மண்டபத்துள் வந்ததும் , அரியனையில் அமர்த்திருந்த யூரிஸ்திஸ் பாதி அச்சத்தோடும், பாதி வெறுப்போடும் அவனை ஏறிட்டுப் பார்த்தான். அந்த வீரர் திலகத்தின் அகன்ற மார்பும், திரண்ட தோள்களும், நெடிய உருவமும், வீரத் திருவிழிப் பார்வையும் அவனுடைய உள்ளத்தை உருக்கிவிட்டன. இவன் மானிடனா, மானிட மடங்கலா? என்று அவன் அஞ்சி நடுக்கமுற்றான். ஹெர்க்குலிஸும் அவனை ஒரு முறை பார்த்தான். இருவரும் முகமனாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹெர்க்குலிஸ், வரவேற்புரைக்காகக் காத்திராமல், தான் வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லத் தொடங்கினான்.


‘மானிடர் அனைவருக்கும். தேவர்களுக்கும் முதன்மையானவர் சீயஸ். அவரை எதிர்த்து நிற்க நான் விரும்பவில்லை. ஆகவே, அவர் கட்டளைப்படி எனக்கு அளிக்கப்பெறும் எந்தப் பணியையும் ஏற்று நிறைவேற்றுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்!’ என்று அவன் கூறினான்.


அதைக் கேட்ட மன்னன், சிறிது தைரியமடைந்து பேசத் தொடங்கினான்: ‘சகோதர! சீயஸ் கடவுளின் ஆணையை நாம் அனைவரும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நானும் நீ செய்ய வேண்டிய பணியைப் பற்றிக் கட்டளையிட வேண்டியிருக்கிறது. உனக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்படியான பணியே விதிக்க நான் விரும்புகிறேன். ஆர்கோலிஸ் நாட்டில் நிமீ என்ற வனத்தில் ஒரு சிங்கம் ஒளிந்து திரிந்துகொண்டிருக்கின்றது. அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/12&oldid=1074296" இலிருந்து மீள்விக்கப்பட்டது