இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஹெர்க்குலிஸ்
9
குடியானவர்களுக்கும் மற்ற மக்களுக்கும் எந்த நேரமும் திகில் ஏற்பட்டிருக்கிறது. ஆயர்களையும் ஆடுகளையும் அது அடித்துத் தின்றுவிடுகின்றது. அந்தச் சிங்கத்தை,நீ போய்க் கொன்று விட்டு வர வேண்டும்!’
சிங்கத்தை வேட்டையாடச் செல்லும் ஹெர்க்குலிஸ் அதற்கே பலியாகிவிடுவான் என்று யூரிஸ்தியஸ் கருதினான். இது ஹெர்க்குலிஸுக்கு அவன் இட்ட முதல் பணி. இத்தகைய கடுமையான பன்னிரண்டு பணிகளை அவனுக்காக ஹெர்க்குலிஸ் செய்ய வேண்டியிருந்தது. அவற்றை வரிசையாகக் கவனிப்போம்.
மன்னனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, ஹெர்குலிஸ் சரேலென்று மண்டபத்தை விட்டு
வெளியேறி, நகரத்தின் கோட்டை வாயிலையும் கடந்து சென்றான்.