பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

29

யும் மோகினிகளும் ஒரு கனத்தில் மாயமாக மறைந்து விட்டனர். வெள்ளைக் கலைமான் பயமில்லாமல் மகிழ்ச்சியோடு துள்ளிக் கொண்டு வீரனைத் தொடர்ந்து சென்றது.

அவன் மைசீனை அடைந்ததும், யூரிஸ்தியஸ் கோட்டைக்கு வெளியே சென்று, அவனையும் தங்கக் கொம்புடன் விளங்கிய மானையும் பார்த்தான். அந்த மானை திரும்ப விடுவதற்கே அவனுக்கு மனமில்லை. ஆயினும், ஆர்ட்டிமிஸ் தேவியின் ஆணையை அவனால் எதிர்க்க முடியாத நிலையில், அவன் பேசாமல் இருந்துவிட்டான். அடுத்தாற்போல ஹெர்குலிஸுக்கு பயங்கரமான ஒரு பணியை விதிக்க வேண்டும் என்பதில் அவன் மனம் ஈடுபட்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/33&oldid=1033699" இலிருந்து மீள்விக்கப்பட்டது