இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
ஹெர்க்குலிஸ்
மறு நாள் பொழுது புலரும் நேரத்தில் அவன் மைசீன் கோட்டை வாயிலை அடைந்தான். அங்கே கோட்டைக் காவலாளி சிறிது நேரம் வேறு வேலையாகச் சென்றிருந்ததால், ஹெர்க்குலிஸ் கோட்டைவாயிலைத் திறந்துகொண்டு, நேராக அரண்மனைக்குள்ளே சென்றான். தொலைவில் அவன் தோள்களிலே பன்றியைச் சுமந்துகொண்டு வருவதை யூரிஸ்
தியஸ் அரண்மனை மாடியிலிருந்தே கவனித்திருந்தான் ஆனால், அவன் கர்ச்சனை செய்துகொண்டு, அந்தக் கோலத்துடனேயே தன் சபா மண்டபத்திற்கும் வந்து விடுவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஹெர்க்குலிஸ் பன்றியை வலையோடு கீழே இறக்கி வைத்தான். உடனே பன்றி உடலை நெளித்துக்கொண்டு தன்-