பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

47

வெள்ளைக் காளைக்கு வெறி பிடிக்கும்படி சபித்துவிட்டான். உடனேயே அந்த உயர்ந்த காளைக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அது நாட்டுக்குள்ளே வந்து, நகரில் பல இடங்களையும் சுற்றத் தொடங்கிற்று. அது தனக்கு எதிர்ப்பட்டவர்களைக் கொம்புகளால் தாக்கியும் முட்டியும் வதைக்கத் தொடங்கிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலர் அதற்குப் பலியானார்கள் விளைநிலங்களில் அது புகுந்து, பயிர்பச்சைகளையெல்லாம் பாழாக்கி வந்தது. மன்னனும் அதை மேற்கொண்டு கட்டி வைக்க முடியாதென்று. அதை வெளியே விட்டு விட்டான். கிரீட் தீவில் அது பல இடங்களில் சுற்றித் திரிந்து. பெருவாரியான நஷ்டங்க உண்டாக்கிவிட்டது. முக்கியமாக, டெத்ரிஸ் என்ற நதியின் தீரத்தில் காவுகள் கழனிகளையெல்லாம் அது பாழாக்கியிருந்தது.


அதை உயிரோடு பற்றி வருவதற்க ஹெர்க்குலிஸ் ஓர் ஓடத்தில் ஏறிக்கொண்டு, கடல் மார்க்கமாகக் கிரீட் தீவை அடைந்தான் அங்கே மினோஸ் மன்னன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராயிருந்தான். ஆயினும், ஹெர்க்குலிஸ், தான் மட்டுமே தனியாக அந்தக் காளையைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, வனங்களிலே அதைத் தேடிக்கொண்டு செல்லத் தொடங்கினான். அடிக்கடி அது சுற்றி வரக்கூடிய இடம் ஒன்றைப்பற்றிக் கேள்வியுற்று. அவன் அங்கே சென்று, ஒரு சுனைப்பக்கத்தில் காத்திருந்தான். அப்பொழுது மாடு கனைக்கும் பேரோசை ஒன்று அவன் செவிகளைத் தாக்கிற்று. சிறிது நேரத்தில் வெள்ளைப் பனிவரை போன்ற கானை ஒன்று மரங்களினிடையே வருவதை அவன் கண்டான். ஒரு கண நேரத்தில் அது தன் தலையை ஆட்டிக் கொண்டு, அவனை நோக்கி ஓடி வந்தது. உடனே அவன். தன் கையிலிருந்த கதையைக் கீழே போட்டு விட்டுத் துள்ளி எழுந்து, அதன் கொம்புகள் இரண்டையும் பிடித்துக்கொண்டான். தன்னை எதிர்த்துப் போராட வல்லமையுள்ள ஒரு மிருகம் கிடைத்த்தை எண்ணி, அவன் மகிழ்ச்சியோடு சிரித்து ஆரவாரம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/51&oldid=1033806" இலிருந்து மீள்விக்கப்பட்டது