இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
ஹெர்க்குலிஸ்
மாட்டுக்கும் மானிட வீரனுக்கும் போராட்டம் தொடங்கிவிட்டது. காலையில் கதிரவன் உதயமானதிலிருந்து ஹெர்க்குலிஸின்
வலிமையைக் காளை நன்றாக உணர்ந்துகொண்டது. இறுதியில் அது அவனுக்குப் பணிந்துவிட்டது. உடனேயே அதன் வெறியும் தணிந்து, அது அவனுக்குப் பின்னால் செல்லத் தொடங்கிவிட்டது.
ஹெர்க்குவிஸ் கிரீஸ் நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காகக் கப்பலில் ஏறிய சமயத்தில், அந்தக் காளையும் சிறு ஆட்டுக்குட்டிபோல், தானாக அதில் ஏறிக்கொண்டு சென்றது. அவனும் அதை அன்புடன் போற்றி அழைத்துச் சென்றான்.