பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஹெர்க்குலிஸ்

கிடைத்துவிட்டதென்ற களிப்புடன், அவை தங்கள் பற்களை வெளியே காட்டிக்கொண்டு, அவனைக் கடித்து, அவன் உயிரோடிருக்கும் பொழுதே அவனுடைய தசைகளைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தன. கொடுங்கோலன் வாழ்க்கை அத்துடன் முடிந்தது.

ஹெர்க்குலிஸும், வீரர்களும் குதிரைகளைப் பிடித்துக்கொண்டு, தங்கள் நாட்டை அடைந்தனர். அங்கே மிகுந்த பாதுகாப்புடன் யூரிஸ்தியஸ் வந்து அக்குதிரைகளைப் பார்வையிட்டான். அப்பொழுது ஹெர்க்குலிஸ் அவனைப் பார்த்து, ‘யூரிஸ்தியஸ்! இயற்கைக்கு மாறான இத்தகைய மிருகங்களை உயிருடன் வைத்திருப்பது தகாது. உன் கட்டளைப்படி இவைகளை உயிருடன் கொண்டுவந்தேனே ஒழிய, இவைகளைத் திரேஸ் நாட்டிலேயே சுட்டுச் சாம்பலாக்கியிருப்பேன் இப்பொழுது இவைகளை ஒலிம்பிய மலைக்கு நீ விரட்டிவிட வேண்டும். அங்கே இவை கோரமான விலங்குகளுக்கு இரையாகட்டும் அல்லது தலைகளிலே இடி விழுந்து மடியட்டும்!’ என்று கூறினான்.

யூரிஸ்தியஸ் அவ்வாறே செய்துவிட்டு, அவனுக்கு விதிக்க வேண்டிய அடுத்த பணியைப்பற்றி எண்ணமிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/56&oldid=1074320" இலிருந்து மீள்விக்கப்பட்டது