பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஹெர்க்குலிஸ்

3

யடித்துத் துடித்துக்கொண்டிருந்தன. இபிக்ளிஸ், நாகங்களைக் கண்டவுடனே பதறி நடுங்கித் துள்ளியதில், கேடயத்திற்கு வெளியே தரையில் போய் விழுந்தான்.


அறையில் ஏற்பட்ட ஓசையையும் , குழந்தை இபிக்ளிஸின் அலறலையும் கேட்டு, அல்க்மினா, துயில் கலைந்து எழுந்து அம்பிட்ரியானை எழுப்பினாள். அவன் உடனே சுவரில் மாட்டியிருந்த தன் உடைவாளை எடுத்துக்கொண்டு, குழந்தைகள் இருந்த அறைக்குள் ஓடினான். அந்த நேரத்தில் அரண்மனைக் காவலர்கள் சிலரும் தீவர்த்திகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, அங்கு வந்து கூடிவிட்டனர். அல்க்மினாவும் பதைபதைத்துக்கொண்டே அந்தப் பக்கமாக ஓடிச் சென்றாள்.

ஹெர்க்குலிஸ் இரண்டு கைகளிலும் இரண்டு கொடிய நாகங்களை இறுகப் பிடித்துக் கொண்டு காட்சியளித்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதும் அரசனும் இராணியும் திடுக்கிட்டு நின்றனர். உடனே ஹெர்குலிஸ் உயிரிழந்த இரண்டு பாம்புகளையும் அவர்களுக்கு அருகில் தரையிலே வீசினான். அங்கே கூடியிருந்தவர் அனைவரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/7&oldid=1033561" இலிருந்து மீள்விக்கப்பட்டது