பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலில் நிறுவப்பட்டுள்ளவை.

  1. பண்டைத் தமிழகத்தில் மலர்க்கலைக் கல்வி இருந்தது.
  2. பண்டைத் தமிழ்ச் சான்றோர் செடிம (செடி அறிவியல்) அறிவுடையோர்.
  3. சங்கப் பாடல்களில் மலர்பற்றிய கருத்துகள் தற்காலச் செடிம ஆய்விற்கு இயைபும், வளர்ச்சிக்குத் துணையும் ஆகும்.
  4. மலர்களால் வாழ்வியல் மரபுகள் மலர்ந்தன.
  5. பூ என்பது பொதுப்பெயர்.
  6. பூவின் தன்மை 10 — பருவம் 7 — உறுப்பு 7 — இதழ்ப் பெயர் 7 — கொத்துப் பெயர் 7 — மலர் அணி வகை 26.
  7. "முல்லை" தமிழர் வாழ்வியல் மலர்.
  8. முல்லை நிலத்தவர் மரபுகள் பல மரபுகளுக்கு முதன்மையானவை.
  9. வாழ்த்துக் கலவையாக முல்லையும் நெல்லும் கொள்ளப்பட்டன.
  10. ஆம்பல்-தாமரை-நீர்த் தொடர்பின் கரணியப் பெயர்.
  11. "குறிஞ்சி" தமிழ் நிலப் பூ.
  12. கோயிற் பூ செய்க்குரியார் குயவர்.
  13. ஆர் என்பது காட்டாத்தி.
  14. வலப்பக்கத்துக் குருத்தே பனம் பூவாகச் சூடப்பட்டது.
  15. வெட்சி விருச்சி அன்று - வாகை இரண்டு வகை - காந்தள், தோன்றி, கோடல் ஒருமைப்பாடு, வேறுபாடு - உந்தூழ் என்பதே உரிய சொல் - கலிமா, வடுமரம், தேமா, கனிமரம்.
  16. பஞ்சணைக்குரிய இலவம் முற்காலத்தது.
  17. அனிச்சம் மரம் குழையும் முறை.
  18. வண்டுண்ணா மலர் இல்லை.
  19. பூக்காது காய்ப்பதில்லை.
  20. முருங்கை தமிழ்ச் சொல்.
  21. தமிழ்ச்சொல் ஆய்வால் பல கருத்துச் சிக்கல்களைத் தீர்க்கலாம்.
  22. உலக மரபுகளில் தமிழ் மரபுகள் முந்தியவையும், பகுத்தறிவிற்கு ஒத்தவையும், இன்றியமையாத கரணியங்கள் கொண்டவையும், பண்பாட்டின் அடிப்படையில் எழுந்தவையும் ஆகும்.