பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

131 உலகில் பூக்கும் செடியினம் 1, 96, 000. இவற்றுள் சாமந்திக் குடும்பச் சூரியகாந்தியில் மட்டும் 13; 000 எண் எதுக் கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன, இவ்வெண்ணிக்கை முன்னே கண்ட கூட்டுமொத்த எண்ணிக்கையில் பதினைந்தில் ஒரு பங்கா கும். எண்ணிக்கை அளவில் இச்சூரியகாந்தி இனம் மேம்பட்டிருந் தாலும் மேலை நாட்டார் அறிவையும் உள்ளத்தையும் சூழ்ந்து மேழ்வன, - ROSE. JASMINE, LOTUS, LILLY. -எனப்படும் உரோசா, மல்லிகை, தாமரை, அல்லி என்னும் பூக்களேயாகும். “மலர்களின் அரசி உரோசாவே” -எனக் கிரேக்க, உரோமக் கவிஞர்கள் பலரும் போற்றியுள்ளனர், இந்து ஒரு காட்டு மலர். ' செடியில் பூப்பது, கருஞ்சிவப்பு, அரக்குச் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெண்மை எனப்பலவண்ணங்களில் மலரும். இருப்பினும் இளஞ்சிவப்பே இதற்குரிய இயற்கை வண்ணம், பிற பூக்களின் வண்ணங்களைக் குறிக்க வண்ணச் சொற்கள் உள்சாள. ஆனால் இதன் பெயர் உலகில் ஒரு ROSE -' உரோசு'- என்னும் வண் ச் சொல்லை உருவாக்கியிருத்தலே இதன் பெருமையை விளக்கு கின்றது. இந்நிறம் ஒரு பெருமை என்றாலும், இது வழங்கும் மெல்லிய மணமே இதன் தனிச் சிறப்பாகும். 'இரிச்சேர்டு' என்னும் ஆங்கிலேயக் கவிஞன், ='உரோசாவை மோந்தாள் குழந்தை 'ஓ' என்றே வியந்தாள் : எனக்கே உ.றாநிலை என்னே அந்தோ உடையதோ ஒரேஒரு மூக்கே" -என இதன் மணச்சிறப்பை ஓர் அரும்புள்ளத்திலிருந்து வடித்துப் பாடினான், குழந்தைகளைக் கவர்ந்த நமது நேரு பெருமகனாரைக் கவர்ந்த மலர் இது. அடுத்து நாம் முல்லை, மல்லிகை, மௌவல் என வழங்கும் இனத்தை மேல் நாட்டார் ஒலிவக் குடும்பம் என்பர்' அக்குடும்பத்தைச் சேர்ந்த து செசுமின்--JASMINE- மலர், இது பெரும்பாலும் வெண்மை நிறத்திலும் சிறுபான்மை பிற நிறங்களிலும் பூக்கும், உள்ளத்தைக் கெல்லும் இனிய மணம்