பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 45 குரல்புணர்சீர்க் கொளை வல் பர்ண்மகனும்மே எனவாங்கு,

கொள்ளழல் புரிந்த தாமரை - வெள்ளி நாராற் பூப் பெற்றிசினே" 83 -என்ச்

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ வழங்கியதைப் பேய் மகள் இளவெயினி என்னும் புலவர் பாடியுள்ளார்.

சிறந்த தலைமக்கட்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. தமது பெருஞ் செல்வங்கொண்டு நல்ல அறச்செயல்கள் செய்த வணிகர்க்கு அரசன் பட்டம் வழங்கிச் சிறப்பித்தான். அப் பட்டத்தின் சின்னமாகப் பொன் பதக்கம் வழங்கப்பட்டது. அப் பதக்கமும் 'எட்டிப் பூ' வடிவில் அமைக்கப்பட்டது. இப்பூ ஒரு மரப் பூ வெண்மை நிறத்தது. சிறிய வடிவில் கொத்தாகப் பூக்கும். ஒவ்வொன்றும் ஐந்தைந்து இதழ்களைக்கொண்ட புனல் வடிவப் பூ. இப்பூவின் பெயரால் அப்பட்டமும் 'எட்டி 'எனப் பட்டது. அதனைப் பெற்றவன் ' எட்டி குமரன்', 'எட்டி சாயலன்‚ என இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளான்.

'எட்டி'ப் பட்டம் போன்று மற்றொரு பட்டம். இது பாண்டிய நாட்டில் வேளாளர்க்கு வழங்கப்பட்டது. அவரினும் அரசனுக்குப் பெண் கொடுக்கும் தகுதி உடையோருக்கு வழங்கப்பட்டது.

88 அறிவும் அடக்கமும் கொண்ட சான்றோராய், அன்பும் அறனும் கொண்ட இல்லறத்தாராய் உள்ளவர் இதற்குரியர். பழியில்லாது புகழ்பெற்ற செயல் செய்தோராகவேண்டும். இப் பட்டத்தின் சின்னமான பொற்பதக்கமும் பூ வடிவில் அமைந்தது.

'காவிதி' என்பது ஒரு பூ, தொல்காப்பியத்தில், - "இகர இறுபெயர் திரிபிடன் உடைத்தே" -என்னும் நூற்பாவின் இ ஒலியில் முடியும் பெயர்க்குக் காவிதி' என்னும் சொல் காட்டப்பட்டுள்ளது. இதைக் காட்டும் உரையாசிரியர் 82 புறம் : 864 : 1.8 88 நன்று திதும் கண்டாய்ந் தடங்கி அன்பும் அதனும் ஒழியாது காத்துப் பழியொரீஇ உயர்ந்து பாப்புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும்' -மது. கா , 439-499 84 தொல் : எழுத்து: 155 - .