பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

1806



இழவுகட்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் பெறும் முறையில் கொடியை இறக்கும் முயற்சியில் கடைசியில் வெற்றி கண்டது.

இவ்வாறு வேலூர்க் கோட்டையை இந்தியச் சிப்பாய்கள் பிணக்காடாக்கிக்கொண்டிருந்த நிலைமையில் மேஜர் கோட்ஸ் என்பவன் வேலூரிலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள ஆர்க்காட்டிலிருந்த கர்னல் கில்லெஸ்பிக்குச் செய்தி அனுப்பினான். செய்தி கிடைத்ததும் ஆர்க்காட்டு வெள்ளைத் தளபதியின் இரத்தம் கொதித்தது. ஒரு பெரும்படையுடன் வேலூரை நோக்கிக் காற்றாய்ப் பறந்தான் கில்லெஸ்பி. ஆர்க்காட்டிலிருந்து வந்த ஆங்கிலப்பட்டாளம் சுமார் பத்து மணிக்கு வேலூர்க்கோட்டை வாயிலை அடைந்தது. கோட்டையின் முதல் இரு கதவுகளும் திறந்தே இருந்தன. மூடிக்கிடந்த மூன்றாவது கதவையும் வெள்ளைப்பட்டாளம் பெருமுயற்சி செய்து சுதந்தர வீரர்களுடன் போராடித் திறந்தது. ஆனால், நான்காவது வாயிலிடம் வந்ததும் பறங்கிப்பட்டாளம் செயலற்று நின்றது. காரணம், கதவுகள் மூடப்பட்டிருந்ததோடு உள்ளே இருந்த நம் சிப்பாய்கள் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்த வண்ணம் இருந்ததேயாகும். எனவே, கர்னல் கில்லெஸ்பி ஆர்க்காட்டிலிருந்து பெரும்பெரும் பீரங்கிகள் வரும் வரை தவம் கிடந்தான். கடைசியாகப் பேய்வாய்ப்பீரங்கிகளும் வந்து சேர்ந்தன. கோட்டைக் கதவுகள் தகர்த்தெறியப்பட்டன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/26&oldid=1138814" இலிருந்து மீள்விக்கப்பட்டது