பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

106



இத்தகைய புரட்சிகளின் முடிவில் உலக இயற்கைக்கு ஒப்ப இங்கும் வீரர் அமர வாழ்வு அடைந்தனர். துரோகிகள் சுகவாழ்வு பெற்றார்கள். ஆர்க்காட்டிலிருந்து பேய் போலப் பறந்து வந்து வேலூர்க்கோட்டைக் கதவுகளைத் தகர்த்து எறிந்த கில்ப்ஸிக்கு இருபத்து நாலாயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் பரிசாக வழங்கப் பெற்றன. சார்ஜன்டு பிராடிலிக்கு இரண்டாயிரத்து எண்ணுாறு வெண்பொற்காசுகள் பரிசளிக்கப்பட்டன. கர்னல் பான்கோர்ட்டின் மனைவிக்கும் மக்களுக்கும் உதவி நிதி அளிக்கப்பட்டது. ஆர்க்காட்டிலிருந்து வந்த பரதேசிப் பட்டாளத்திற்கு ஒரு மாதச் சம்பளம் இனாமாக அள்ளி வழங்கப்பட்டது. துரோகியாகச் செயல் புரிந்த முஸ்தாபாவுக்கு இரண்டாயிரம் வராகன்கள் பரிசாகத் தரப்பட்டன. மேலும் வாழ்நாள் முழுவதும் ஒரு சுபேதாருக்குள்ள சம்பளம் அவனுக்கு உபகாரச் சம்பளமாகத் தரப்பட்டது. மேற்குறிப்பிட்ட தனி நபர்க்கு மட்டுமேயன்றிப் புரட்சியை ஒடுக்குவதில் துணை புரிந்த படைப்பிரிவினர் பலருக்கும் மொத்தச் சலுகைகளும் காட்டப்பட்டன. துரோகிகள் வாழ்வு பெற்ற வரலாறு இதுவாக, வீரத்தியாகிகளைச் சாவும் புகழும் சேர்ந்து தழுவின. புரட்சி நடத்தியதற்காக ஆறு தேசபத்தர்களின் மார்பகங்கள் பீரங்கிகளால் பிளக்கப்பட்டன. ஐந்து பேர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுப்பேர் தூக்கிலிடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/32&oldid=1138822" இலிருந்து மீள்விக்கப்பட்டது