பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

1806



வித்திட்ட பெருமை தமிழினத்திற்கு உண்டு என்று பெருமை கொள்வோமாக! உள்ளத்தளவில் பெருமை கொள்வதோடு ஓய்வு கொள்ளாது, முதல் இந்திய இராணுவப் புரட்சி நடைபெற்ற வேலூரில்-நூற்றுக்கணக்கான வெள்ளைக் கொடுங்கோலர்களுக்குக் கல்லறையாகவும் பல நூறு சுதந்தர வீரர்களுக்குப் பலி பீடமாகவும் விளங்கிய வேலூர்க்கோட்டையில் 1806ல் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டு மாண்டு மடிந்த பேர் ஊர் தெரியாத பெருமை மிக்க தமிழ் வீரர்கட்கு நன்றி உணர்ச்சியுடன் நினைவுத்தூண்-வெற்றித்தூண் எழுப்பிப் புகழெய்துவோமாக! 'பாரதமே, நின் விடுதலைக்காக வடவிந்தியாவில் எழுந்த புரட்சிப் பெருஞ்சோதித்கு உணர்வும் ஒளியும் உயிரும் கொடுத்த சுடர்க் கொடியாள், நீ பெற்ற நங்கையருள் தலை மகளாகிய தமிழணங்கு , 'என்று கூறி, விடுதலை பெற்ற இந்தியா ஊழியையும் வென்று வாழ வாழ்த்தி வணங்குவோமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/50&oldid=1138936" இலிருந்து மீள்விக்கப்பட்டது