பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨

 

தொல்காப்பியம்.


எழுத்ததிகாாம்,

முதலாவது

நூன்மரபு

⬤ ✽ ⬤



எழுத்தெனப் படுப,
வகரமுத னகரவிறு வாய்முப் பஃதென்ப,
சார்த்து வரன்மரபின் மூன்றலங் கடையே.

- என்பது சூத்திரம்.

இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனின் எழுத்துணர்த்தினமை காரணத்தா னெழுத்ததிகாரமென்று பெயராயிற்று. எழுத்தையுணர்த்திய வதிகாரமென விரிக்க. அதிகாரம் - முறைமை.

எழுத்துணர்த்தமிடத் தெனைத்துவகையா னுணர்த்தினாரோ வெனின் எட்டுவகையானு மெட்டிறந்த பல்வகை யானும் உணர்த்தினார்.

எட்டுவகையாவன - எழுத்தினைத்தென்றலு மின்னபெயரினவென்றலு மின்னமுறையின வென்றலு மின்னவளவின வென்றலு யின்ன பிறப்பின வென்றலு யின்ன புணர்ச்சியின வென்றலு மின்னவடிவின வென்றலு மின்ன தன்மையின வென்றலுமாம். இவற்றுட்டன்மையும் வடிவு நமக்குணர்த்த லாகாமையி னாசிரிய ரீண்டுரைத்திலர் - ஏனைய விதனுட் பெறுதும்.

எழுத்தினைத்தென்றலைத் தொகை வகை விரியானுணர்க. முப்பத்து மூன்றென்றல் தொகை; உயிர்பன்னிரண்டு முடம்பு பதினெட்டுஞ் சார்பிற் றோற்ற மூன்று மதன்வகை; அளபெடையேழு முயிர்மெய்யிருநூற் றொரு பத்தாறு மவற்றொடு கூட்டி யிருநூற்றைம்பத்தாறென்றல் விரி.

இனி எழுத்துகளது பெயரு முறையுந் தொகையு மிச்சூத்திரத்தாற் பெற்றாம். வகை ஒளகாரவிறுவா யென்பதனானும், னகர விறுவாயென்பதனானும் , அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மென்பதனானும், பெற்றாம்.

விரி- குன்றிசைமொழிவயி னென்பதனானும், புள்ளியில்லா வென்பதனானும், பெற்றாம்.

அளவு - அவற்றுள், அ - இ - உ - என்பதனானும், ஆ-ஈ-ஊ - என்பதனானும், மெய்யினளவே யென்பதனானும், அவ்வியனிலையு மென்பதனானும், பெற்றாம்.

பிறப்பு, பிறப்பியலுட்பெற்றாம்.

புணர்ச்சி - உயிரிறு சொன்மு னென்பதனானும், அவற்று ணிறுத்த சொல்லி