பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

       சிரித்தால்கூடச் சிறை.


"அழச்சொலு கிறாயா அதுசெயேன்"என்றேன்.
சூப்பிரண் டெண்டுக்குச் சொல்லிய டாக்டர்
பேப்பரில் எழுதிப் பிழையென அனுப்பினான்.
அவனெனை விளித்துத் "தவறு நீ செய்தது;
இருமுழு வாரம் அபராதம் என்றான்.

  • திங்கள் ஒன்றில் சென்னைஐக் கோர்ட்டில்

செய்த அப்பிலில் திருத்தமும் ஒழுக்கமும்
தேசாபி மானமும் சேர்ந்தநல் ஜட்ஜ்
சங்கர நாயர் தகுதியில் பின்னியின்
தீர்ப்பினை சஸ்பெண்டு செய்தறி வித்தார்.
தொலைந்தது வேலை.சொந்த உணவும்,
சொந்த உடையும்,சொந்தப் படுக்கையும்
வந்தன.கொண்டவை மகிழ்வுடன் இருந்தேன்;
விஜாரணைக் கைதிகள் மேவும் பிளாக்கில்
ஜெயிலர் வந்து" நும் தேக நிலைக்கு
வேலை செய்தல் மிகநலம். ஆதலால்
வேலை செய்யநீர் விரும்புகின் றீரா?
என்று வினவினன். “யானிவண் வேலை
செய்திட வந்திலேன் ; செய்திட விரும்பிலேன் "
என்றேன். என்அறை பூட்டியவன் ஏகினன்.


திங்கள் -மாதம்
t பின்னி. A. H. Phinhey.
1 சஸ்பெண்டு நீக்கி. Suspend.
118

 

118