பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அச்சுத்தொழிலாளி-சிதம்பரம்!


அவர்க்குச் சிறுமை அளிப்பின் அவரும்
நமக்குச் சிறுமை நல்குவர். நம்மால்
ஜெயிலை கடாத்த முடியா மற்போம்.
ஆகலான் அவனை நீ அன்பொடு நடாத்து.
வேலை யென்ற பேருக் குன்னுடை
ஆபீஸ்க்கு வேண்டும் பாரங்களையே
கம்போஸ் செய்யக் கழறுக" என்று
சொல்லி ஏகினான். சூப்பிரண் டெண்டுயான்
நூற்கும் வேலையை நொடித்தச் செழுத்துக்
கோக்கும் வேலையைக் கொடுத்தான் அன்புடன்.
அதுமுதல் ஜெயிலுக் கரசன் நானே!




பாரங்கள்- அச்சிட்ட விண்ணப்பத்தாட்கள். Forms.
கம்போஸ்-அச்சுக்கோத்தல்,
131

 

131