இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படிப்புக்கு முற்றுப் புள்ளி.
மேலாம் படிப்பினை விரும்பி அந்நகர்
காலேஜ் என்னும் கல்லூரி தன்னை
அடையச் செய்தனன் அறிவுயர் தந்தை.
கடைவழி சென்றியான் காலம் கழித்தேன்.
அன்னது தெரிந்தவன் அடைந்து * மந்திரம்
என்னை என்னூர்க் கிழுத்துச் சென்று,
பலமதி கூறிப் பக்கத் திருத்திச்
சிலதினம் கழிக்கச் செய்தனன். அந்நாள் :
t காலேஜ் - கால்டுவெல் காலேஜ்.
- மந்திரம் - திருமந்திர நகர்.
15