பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிதம்பரச் சிறுவனுக்குச் சங்கடம்!

இந்த நாளையில் என்சிறிய அத்தை
வந்தனள் கொழுநன் வான்செல என்னிலம்.
பெரிய அத்தை பெரு முத்து சாமியை
உரிய மகனா வுடன்கொண் டேகினள்.
சின்ன; சுப் பையனைத் தினமும் ஊட்டி
என்னினும் அவாவி எழிலுற வளர்த்தேன்.
தமக்கையும் தாயும் சார்ந்தவர் தம்மொடு
நுமக்கிங் கென்னென நொடியினில் ஆயிரம்
சண்டை தொடுப்பர்; தடுத்ததை நிறுத்திப்
பண்டை யுரிமையைப் பகர்வேன்; அந்நாள்
மிகுசெல விட்டு விவாகம் நடாத்தித்
தகுதியில் , கணவனை யென் தமக்கைக் களித்தென்
வீட்டுடன் இருக்க விளம்பினன் தந்தை. யான்
காட்டினிற் சென்றிடுங் கதியினை அடைந்தேன்.
பொறாமை மேற்கொடு புறத்திருந் துற்றவன்
அரும்பல பழிகளை ஆக்கிக் கூறுவன்.
தந்தை என்னைத் தாறுமா றாக
நிந்தை புரிந்து நினைத்தற் கரிதா
அடிப்பன்; மிதிப்பன், யானுடன் ஓட்டம்
பிடிப்பன். அவன் பின்றொடர்ந்து கொணர்வன்.

 

- முத்துசாமி —நல்ல முத்துசுவாமிப் பிள்ளை.

சுப்பையன் — சுப்பிரமணிய பிள்ளை. கணவன் — கணவனாகிய முத்துகுமாரசாமிப் பிள்ளை.

20