பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆதியில் ஒன்றும் அந்தத் தொன்றும்
ஓதி நிறுத்துவேன் உன்பொருட் டாக.
முடிமனில் என்னுடை முன்னோர் நாள்முதல்
அடிமை புரியும் அறிவினைக் கொண்ட
வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை
ஏதமில் லாமலே எண்ணிலா வழக்கில் [னேன்.
அமிழ்த்தினர் போலிஸார் ; அனைத்தினும் திருப்பி
தமிழ்த்துறை உணர்ந்து - தம்பிரா னான
ஆறுமுகம் பிள்ளை ஆசாரி யொருவனைக்
கோறுதல் புரிந்ததாக் கொணர்ந்த வழக்கினில்
அவனைத் திருப்பினேன். அறத்தொடு நிற்குமென்
தவமனை மகவியல் சாற்றுவன் இனியே.

 

முடிமன்- ஒட்டப்பிடாரத்திற் கருகிலுள்ள சிற்றூர்.

t ஆறுமுகத் தம்பிரான்- திருவாவடுதுறை மடத்தில் தம்பிரானாக இருந்து காலம் சென்றவர்.

28