பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

என சில உரைத்தவற்கு என்னிடம் விஞ்சு
“கதையை செய்து நீ கடற்கரைப் பிரசங்கம்
ஒன்றனை மட்டும் ஒழியென” வேண்டினன்.
“இன்று அவன் பேசுவான் ஏதிலன்” என்றேன்.
நடந்தான் விஞ்சு நன்றெனப் பிறக்கனொடு.
நடந்தேன் நானும்; நன்னினேன் கடற்கரை.
போலீஸ் வைவர் பொழுதுபடு முன்னர்
காலி நிலத்திற் கடற்கரை ஒரம்
வெடிகள் கைக்கொண்டு வேண்டிய மட்டும்
கடிகள் தரல்போல் அலரி நின்றனர்.
பத்ம நாபன் பயந்திட எழுந்தான்.
சத்தம் மிகுந்தது ஜனத்திரள் பெருக்கம்.

 

62