பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 

தொழிலாளர் வேலைநிறுத்தம்:
துரைகள் நடுக்கம்.



ஆசுவைக் கண்டதும், “அழகிய மில்லினை
மோசம் செய்ததென் மொழிகுவா” என்றான்.
“கொடியபல செய்து கூலி யாட்களை
மடியும் விதத்தினில் வருத்திவந் ததனால்
வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்:
நாலு தினத்தினில் நன்மையாம்” என்றேன்.
படையின் செருக்கைப் பகர்ந்தான். எழுந்தேன்
“படையிலா ரிடத்ததைப் பகர்தல்நன்றன்” றென்றே!

 

68