பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

விஞ்சு பதிலுரை விளம்பத் தெரியா
தஞ்சி விழித்தனன். அந்தச் சமையம்
திருநெல்வேலி டிவிஷன் போலீஸ்
பெரிய இன்ஸ்பெக்டர் "பேசா தொன்றும்
செல்லுக" என்றனன். சேர்ந்தவண் இருந்த
நல்லவர் பலரையும் நானுடன் பார்த்துக்
கொடுத்த மனுவிற்குக் கூறிலன் விடையினம் ;
அடுத்தனர் போலீஸார் அதன்முன். ஆதலால்
செல்கிறோம் சிறைக் "கெனச் செப்பினேன். அவருள்
நல்லியல் சுந்தரராஜன் என்பவன்
“ சிதம்பரம் முகத்தின் தேஜசைப் பாரென"ப்
பதம் சில வழங்கினன் பக்க நின்றார்க்கு.
தெற்கே நோக்கினன் செப்பிய இன்ஸ்பெக்டர்
தெற்குள , எமனூர் செல்லுக என்றல்போல்.
குருநாதன் இடத்துக் கொண்டுபோய்ப் பாலனைத்
"தருவாய் அவனுடை தாயிடம் " என்று
சென்றேம் மூவரும் ; தெற்கொரு தீவழி
அன்றே கண்டேம் : அதன் வழி இறங்கினேம்.
புவியினைத் தொடவும் பொள்ளென அழைத்தான்
கவியின் செயலெலாம் கைக்கொண்ட விஞ்சு,
வந்தேம் மேடை "மறுபடி நீர்மனுத்
தந்தது வாயிதாச் சாற்றிய பின்னரே.
அதனால் ஜாமீனை அங்கீ கரித்திலேன்,

 

1 எமனூர்-சாவு

  • கவி-குசங்கு,

79