பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சிங்கங்கள் சென்றன சிறைக்குள் .


இதுவே யென்பதில் என்றனன். பின்னர்
சப்ஜயில் ✝️ வராந்தாச் சார்ந்துநன் கிருந்தோம்.
பப்ளிக் ரோட்டினும் பப்ளிக் கோர்ட்டினும்
நிரம்பிய குழுவையென் நெறியினின் றகற்றி
வரம் பெற வருவர்போல் வண்டி, இரண்டொடு
போலிஸார் வந்தமைப்
“ போவமா " என்றனர்.
சாலவும் நன்றெனச் சார்ந்தேம் வண்டியை,
இருநான்கு பாகம் ஏகவும் வண்டிகள்
இருநான்கு திசைநின் றெண்ணிலார் வந்து
முன்னும் பின்னும் மொய்த்தனர் எம்மை.
"இன்னுமென் பின்னர் ஏகன்மின் ' எனப்பதில்
கொடுத்தே பாளையங் கோட்டைச் சிறையினை
அடுத்தேம். பின்செயல் அறைவேன் இனியே :,
64
+ airsgr-srier, Verandah-
80

 

80