பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள்


இலங்கையை முன்னா ளாண்ட விராவணனீந்த நோயாற்
கலங்கிய தேவர் தம்மைக் கருணையாற் காத்த தேவே
நலங்கிள ரெனது மைத்து னன்றின மினிது வாழும்
பலங்கொடுத் தருளி யென்றும் பல்பிணியகற்றிக்காப்பாய். ௰௨

வேறு.

துங்க மனத்தாற் றொழுவா ருடைய சுகங்கருதிப்
பங்கயத் தாளைப் பரிந்து மணந்து பதமளிக்குஞ்
செங்கை யுடைய திருமா லேகா வென் தந்தை
றங்கை புதல்வன் முத்து சாமிப் பிள்ளையையே. ௰௩

ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள்.

உண்டிருக்க நல்லன்ன மூரினுள்ளே யோர்வீடு
கண்டிருக்க நன்மக்கள் காதலிக்கப் பெண்டொருத்தி
கற்றுணர வோர்தோழன் காக்கவிறை நோன்புடையோன்
பெற்றபிறப் பேருற் பிறப்பு.


ஆன்றோர் தங் கேண்மை யநுதினஞ்செய் சற்கருமஞ்
சான்றோர்தந் தூயகுணஞ் சார்ந்தெங்கு - மான்ற
படித்தா யிருக்கும் பரம்பொருளைப் போற்றல்
படித்ததனா லாய பயன்.


வானிலுள் தேவர்கள் மண்ணிலுள மாந்தர்கள்
கானிலுள் மாபறவை கல்லெல்லாந் - தானெனவே
சந்ததமுங் கொண்டு தனக்கயலாக் காண்கிலையேற்
பந்தமெலாம் போகும் பறந்து.
15.
பொருள்சேரச் செய்வதறம் பொய்யாநல் லன்பே
யருள்சேரச் செய்வதுமெய் யன்பே -மருள்சேர்க்குந்
துன்பமிலா முத்திக்குந் தூயவன்பே நன்முதலா
மன்பிலா னென்மனித னாம்.
8¹.
2
17