பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பொருள் வாழ்த்து.

[௫.

மூலப் பழம்பொருளே மூவுலகாய்த்தோற்றுமொ
சீலப் பெருந்திறனே செப்பரிய - வாலச்
சிறையினுளே யென்னின் றிறனெல்லா நீங்க
மறையவைத்த தென்னோ மறை.
மூவா வுலகின் முதலாகி நிற்கின்ற மொய்ம்புடை
யோய், தேவா யறவோர்க்குச் சீர்பல வீகின்ற செம்
மையினோய், பாவா யறிவோர்க்குப் பாலினுந் தித்திக்
கும் பண்புடையோய், காவாநிற் பாயெனக் கண்டுநிற்
சேர்ந்தேனைக் காத்தருளே.
2
பூதமெனு மைந்தாகப் போந்துளோ யின்பமுன்
பாதநினை வுள்ளார்க்குப் பாலிப்போய் - சீதம்
வெயிலிரண்டுஞ் சேர்ந்தெனது மேனியினைத் தா
செயலளித்த தென்னோ திறன். (க்குஞ் ங
பூதமைந்தையும் பொருத்திப் பலவாகப் போந்து
நிற்போய், சேதமு நன்மையுஞ் செய்யு மிரண்டினுஞ்
சேர்ந்துநிற்போய், பாதகஞ் செய்பெரும் பாவியு நன்
றுறப் பார்த்துநிற்போய், ஏதமி னெஞ்சுட னிச்சி
றை நின்றுளேற் கின்பருளே.
P
மாகடலாச் சூழ்ந்துலகை மாறாத நீரானோய்
தேகந் தினமெலியத் தின்னுமொரு - சோகம்
வளரும் விதத்திலெனை மாணாச் சிறையுட்
டளரவைத்த தென்னோ தயை.
கு
27