மெய்ப்பொருள் வாழ்த்து
ஞானேந் திரியமாய் ஞாலமெலாங் காண்பவனே
மானேந்து மாற்றிலுயர் மானத்தை - நானேந்தி
நிற்பதனா லென்னபய னேருயிரை யிவ்விடத்தி
லற்பமென வெண்ணாத தால்.
உக ஞானேந் திரியங்க ணாளும் விழுபவா நண்ணி நிற்போய்,மானேந்து நேரிலா மானமா வென்னுளே மன்னிநிற்போய், கோனேந்து நேரிலாக் கோலினா லிச் சிறை கொண்டு நிற்கு, நானேந்து மக்களை நண்ணிட நாட்டினை நல்குவையே. உஉ 35 4
மனமாகிச் சொல்லரிய மாயமெலாஞ் செய்வோய்
நனவாதி மூன்றினுமே நல்ல - வினவா
னெனச்சான்றாய் நின்றென்று மின்புறுவோயென்
லினச்சோர்வை மாற்றாத தென்.
னல் உங தேறு மனங்கொண்ட சீராரை யின்பினுட் சேர் த்து நிற்போய், மாறு மனங்கொண்ட மாணாரைத் துன்பினுண் மாய்த்து நிற்போய், கோறு மறமொடு கூரிய தீமையே கூடியுள்ள, சீறு மரவின் சிறை நீக்கி நாட்டொடு சேர்த்தருளே.
புத்தியென நின்றுள்ளம் போந்தபல வற்றுள்ளுஞ்
சத்திதெனக் காட்டுந் தரமுற்றோய் - பத்தியொடு
நின்னடியை யெஞ்ஞான்று நெஞ்சினுளே கொண்டு
மின்னலுறக் காரணமிங் கென்.
உரு 31