பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

அளித்தலும், கடவுளை விராரிப்பார் வேண்டும் - விகளை எல்லாம் செய்தலும் அருளின்பால் படும். ஈகையென்பத்தெவ்வுயிர்க்கு மில்லாத கண்டளித்த ஈகையொன்றி நிற்பாரை யிவ்வுலகில் -- வாகைபுனை மன்னர்க்கு மன்னரென வாக்கானு மேத்தியார் சொன்ன பணி செய்தல் நொழுது, (சு ) அ-ம்:-- ஈகை என்பது எவ்வுயிர்க்கும் இல்லாத வற்றைக் கண்டு அளித்தல், இவ்வுலகில் ஈகையை ஒன்றி நிற்பாரை வாகையைப் புனையும் மன்னர்க்கு மன்னரென வாக்கானும் எத்தி, அவர் சொன்ன பணியைத் தொழுது செய்தல். ப-ரை :-ஈகை என்பது-கை என்று சொல்லப் படுவது, என் உயிர்க்கும் இல்லாத கண்டு அளித்தல். சகல உயிர்களுக்கும் இல்லாதவற்றைத் தானே பார்த்துக் கொடுத்தலும், இவ் உலகில் - இவ்வுலகத் தில், ஈகை ஒன்றி நிற்பாரை-ஈகையைக் கைக்கொண்டு நிற்பாரை, வாகை புனை மன்னர்க்கு மன்னர் எனவெற்றி மாலையைச் சூடும் அரசர்க்கு அரசரென்று. வாக்காலும் எத்தி-(மனத்தாலும்) வாக்காலும் துதி த்து, அவர் சொன்னபணி தொழுது செய்தல்-அவர் சொல்லிய ஊழியங்களை வணங்கிச் செய்தலுமாம். க-ரை :--ஈகை என்பது பல உயிர்களுக்கும் வேண்டுவனவற்றைத் தானே அறிந்து கொடுத்தலும் அவ்வாறு கொரிப்பார் சக்கரவர்த்திக்கெனபாதிந்து அவர் சொல். . ஊரியங்களை செய்தார்.