பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயகனிடத்து நடந்த நேர்மை.

21

மன்கா ரியம்நடத்தும் மாணமைச்சன் போல் தலைவன்
தன்கா ரியமெல்லாம் தான்செய்வாள்—நன்சார்பே
தான்மொழிவாள் மிக்க தகவாய தேபுரிவாள்
தேன்மொழியாள் சிந்தை தெளிந்து. ௱௧௫

மொய்யிருளைப் போக்கி முனிகதிர்போல் மூடமெனும்
பொய்யிருளைப் போக்கிடும்நல் புத்தியுளாள்—மெய்யுரையே
சாற்றுவாள் எஞ்ஞான்றும் தன்னா யகன்பதமே
போற்றுவாள் அன்பே புரிந்து. ௱௧௬

மின்னணிகள் மென்துகில்கள் மின்னாள் கணவனுனக்
கென்னவகை வேண்டும் எனவினவில்—நின்னுடைய
சிந்தைக் கிசைந்ததுவே சீரா மெனக்கென்று
பைந்தொடியும் சொல்வாள் பதில். ௱௧௭

எப்பொருளும் எப்பொழுதும் இல்லமதில் இல்லையெனாள்
கற்பகப்பூங் கொம்போர் கணவியென—இப்புவியில்
மன்னும் சிதம்பரமா வள்ளல் தனக்கிசைந்த
தென்னும் படியே யிவள். ௱௧௮

எங்கேனும் தன்கொழுநன் ஏகியொரு போதுமறந்
தங்கே யிருந்தக்கால் ஆற்றாளே—செங்கதிர் தான்
இல்லாச் செழுங்கமலம் என்ன முகம் வாடி
நல்லாள் தளர்வாள் நலிந்து. ௱௧௯

ஆங்கவன் தன் நல்வரவு கண்டால் அணிமதிகண்
டோங்குகடல் போல்உவகை யோங்குவாள்—பூங்கழல்கள்
போற்றுவாள் இன்பப் புணரியால் வெம்மையினை
ஆற்றுவாள் அன்னாள் அகத்து. ௱௨௰