பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாமன் மாமி முதலியோர்க்கு நடந்த நேர்மை.



பூமிமுழு தும்வியந்து போற்றவே தன்மாமன்
மாமி இளங்கொழுந்தர் மைத்துனிபால்—நேமமுடன்
இன்னாள் நடந்தவகை யின்பமொடு கூறுவேன்
என்னால் இயலுமள விங்கு. ௱௨௭

தன்னுடைய நாயகனின் தந்தையாம் மாதுலனைத்
தன்னுடைய தந்தையெனத் தன்னுளத்தில்—உன்னிநிதம்
செய்பணியா வுஞ்செய்வாள் சீர்சேர்தன் மாமியுடன்
தெய்வஅடி யார்போல் திகழ்ந்து. ௱௨௮

அன்பன்தன் அன்னைதன தன்னையெனக்கொண்டுளத்தில்
இன்பமொடு செய்திடுவாள் எப்பணியும்—அன்போ
டவள்சொற் கடவாள் அகிலமதில் மாமிக்
கிவளல்லால் நன்மருகி யேது. ௱௨௯

இல்லமதில் செய்தொழில்க ளெல்லாம் இவள்மாமி
சொல்லுமுனஞ் செய்திடுவாள் சோர்வின்றி—மெல்லியலாள்
மெய்வருந்து மென்றிரங்கி மேவியவள் செய்யலுறின்
செய்யவிடாள் மின்னாள் செறிந்து. ௱௨௰

பொன்மா தனையாளைப் புண்ணியமென் செய்தேனோ
நன்மா மருகியா நான்பெறவே—என்மா
மகராசி யிம்மனைக்கு வந்ததுதொட் டிங்கே
தகவாய தெம்மாண்புந் தான். ௱௨௧

என்றே மகிழ்ந்துரைப்பள் இன்பமொடு மாமியுந்தான்
நன்றோர் வடிவான நங்கையினை—என்றுமே
அந்நகர்வாழ் ஆயிழையார் அன்னையெனக் கொண்டவளின்
தன்மையினைப் போற்றுவரே சார்ந்து. ௱௩௨