பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாயிரம் இம் மனம் போல வாழ்வு" ஸ்ரீ. ஜேம்ஸ் ஆலன் அவர்களது அரிய நூல்களில் ஒன்றன் மொழிபெ யர்ப்பு. இம்மையிலும் மறுமையிலும் மேலான பதவி களை நாம் அடைவதற் குரிய வழிகள் இந் நூலில் மிக நன்றாக வரையப்பட்டுள்ளன. இந்நூலின் அருமை இதனை ஒரு முறை படித்துப் பார்த்த அளவிலே நன்கு விளங்கும். இவ்விரண்டாம் பதிப்பின் தமிழ் ந.ை-- முதலியன முதற்பதிப்பின் தமிழ் நடை முதலியவற் றினும் மிக இனிமையாகவும் அழகாகவும் அமைந்துள் ளன, இதன் முடிவில் ஸ்ரீ. ஜேம்ஸ் ஆலன் அவர்களது சரித்திரச் சுருக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பதிப்பின் கையெழுத்துப்பிரதியைச் சென்னை பச்சையப்பன் கல்லுரி சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமாந். தி. செல்வக்கேசவராய முதலியாரவர்கள், யம். ஏ., முதனூலோடு ஒத்துப் பார்த்துச் சீர்திருத்தி அழகுபடுத்தித் தந்தார்கள். ஸ்ரீமார். முதலியாரவர் கள் எனது நூல்கள் சம்பந்தமாக எனக்குச் செய்து வரும் நிகரற்ற பல உதவிகளுக்காக பான் அவர்களுக்கு எனது பானம் வாக்குக் காயங்களால் எஞ்ஞான்றும் வந்தனை வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ளேன் - தமிழறிஞர் பலரும் இந்நூலைக் கற்பிப்பதற்கு உரியர். இதில் கூறப்பட்டுள்ள பொருள்களுக்குப் பொருத்தமான மேற்கோள்களை நமது தமிழ் நால்