பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் இன்பத்தின் மர்மம்,

அதனை நிறைவேற்ற நிறைவேற்ற, அது மிக மிகச் சத்தமிட்டுக் கூக்குர விடுகின்றது. அவாவைப் பற்றி யவர், சரீரநோவையாவது மனநோவையாவது அடைந்து, அகத்தைச் சுத்தப்படுத்தும் துன்பமாகிய நெருப்பில் மூழ்கும் வரையில், அவரிடம் அது மேன் மேலும் வேலை வாங்குகின்றது. அவா நரகத்தின் அடி வாரம்; சகல துன்பங்களும் அங்கு நிறைந்திருக்கின் றன. அவாவை விடுதல் சுவர்க்கத்தை அடைதலாம்; சகல இன்பங்களும் அவ்விடத்தில் காத்துக்கொண் டிருக்கின்றன. என்னான் மா வைப்பொறிகட் கெட்டாத மெய்ப் பொருள் பால் பொன்னாடு பெற்றுவரப் போக்கினேன்-என்னான்மா' நானே சுவர்க்கம் நரகம் எனச்செவியுள் மானே! மொழிந்ததுடன் வந்து. சுவர்க்கமும் நரகமும் அகத்தின் நிலைமைகள், 'யான்' என்பதனுள்ளும், அதன் சகல போகங்க ளுள்ளும் ஆழுங்கள்; நீங்கள் நரகத்துள் ஆழ்கின் றீர்கள். 'யான்' என்பதினின்றும் நீங்கி, 'யான்' என்பதை முற்றிலும் துறந்தும் மறந்தும் இருக்கிற அறிவின் ஸ்தானத்திற்கு உயருங்கள் ; நீங்கள் சுவர்க் கத்துள் பிரவேசிக்கின்றீர்கள். 'யான்' என்பது கண்ணில்லாதது; பகுத்தறிவில்லாதது; உண்மை யான ஞானமில்லாதது; எப்பொழும் துன்பத்திற்கே செலுத்துவது. சரியான காட்சியும், பட்சபாதமற்ற அறிவும், உண்மையான ஞானமும் கடவுளுக்குரிய 95