பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஸ்ரீ. ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத் திற்கு, முக்கியமாக நம்தேயத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவை யென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம், அந் நூல்கள் நம் வள்ளுவர் மறைக் கொப்பப் போற்றத்தக்கவை. ஆகவே அந்நூல்களிற் கூறியுள்ள பொருள்களைக் கசடற உணர்ந்து கைக் கொண்டொழுகுபவர் இவ்வுலகத்திலும் மறு உலகத் திலும் மனிதர் அடையக்கூடிய மேலானநிலைகளை யெல்லாம் அடைவரென்பது திண்ணம். ஆதலால், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அந்நூல்களால் நன்மைஅடையவேண்டும்என்பதே நான்அவைகளை மொழிபெயர்த்ததற்குக் காரணம்.

இது வரையில் நான் வெளியிட்டவை யன்றி இந் நூலையும் அச்சிடுவதற்குப் பொருளுதவிய சீலர்கள், எனது மெய்ச் சகோதரர்களாய்,தஞ்சை ஜில்லா தில்லையாடியில்வசிக்கின்றஸ்ரீமாந்.த.வேதியப்பிள்ளையவர்களும்,தென் ஆபிரிக்கா-டர்பன் நகரில் வசிக் கின்றஸ்ரீமாந்.சொ.விருத்தாசலம்பிள்ளையவர்களு மே. இம்முயற்சியில் எனக்கு உதவியாயிருக்கின்றவர் கள் சென்னை, பச்சையப்பன் கல்லூரி, சுதேசபாஷா அத்தியக்ஷகர் ஸ்ரீமாந். தி. செல்வகேசவராய முதலி யாரவர்களே. அம்மூவர்களும் அவர்களைச் சேர்ந்தார் களும் சகல செல்வங்களோடும் புகழ்களோடும் இன்பு றுமாறு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

பிரம்பூர், சென்னை
. நளனு ஆனிமீ 10௳ வ. உ. சிதம்பரம் பிள்ளை .