பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். கிடைக்கு மென்ற நம்பிக்கையோடும், நிர்ப்பயமும் அமைதியு முள்ள் ஹிருதயத்தோடும் உங்கள் காரியத்தைச் செய்தலும், பிரபஞ்ச நியதி ஒரு போதும் தவறமாட்டா தென்றறிதலும், உங்கள் விருப்பம் ஒரு சிறிதும் குறையாமல் உங்கள் பால் திரும்ப வந்து சேரு மென்றறிதலுமே தெய்வநம்பிக்கையாம்; தெய்வநம்பிக்கையில் வாழ்தலாம். அத்தகைய 5ட பிக்கையின் வலியால் சந்தேகமாகிய நீலநீர் பிளக் கப்படும் ; கஷ்டமாகிய கருமலை தகர்க்கப்படும் ; அந் நம்பிக்கையைக் கொண்ட ஆன்மா யாதொரு துன்பமும் உறாது சென்றுவிடுகின்றது. நண்பர் களே ! இந் நிர்ப்பயமான நம்பிக்கையாகிய விலை மதிப்பற்ற உ.டைமையை எதற்கும் மேலாக அடைய முயலுங்கள் ; ஏனெனில், அஃது ஆரோக்கியத் தையும், வெற்றியையும், சாந்தத்தையும், வலிமை யையும், வாழ்க்கையைப் பெரியதாகவும் துன்ப மற்றதாகவும் செய்யும் எல்லாவற்றையும் கொடுக்கும் மந்திர யந்திரமாகும். அத்தகைய நம்பிக்கையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுவீர்களாயின், ரிக்கிய மலை பின் மீது நித்தியப் பொருள்களைக் கொண்டு, நித்திய வீட்டைக் கட்டுகின்றவர்களாவீர்கள் ; நீங்கள் கட்டும் வீடு ஒரு காலத்திலும் அழியாது ; அது முடிவில் தூளாகப் போகின்ற சகல ஸ்தூல உடைமைாளையும் போகங்களையும் கடந்துதிக்கும். நீங்கள் துக்கமாகிய கடலுள் ஆழ்த்தப்பட்டாலும், நீங்கள் சந்தோஷமாகிய மலையின் மீது உயர்த்தப்