பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௭௫-ம் அதி.–அரியவை பெறுதல்.

அரியவை நட்புநா டரண்பொருள் படையே. ௭௪௧
அவையொருங் கெய்தின்வா யமிழ்தடைந் தற்றே. ௭௪௨
ஒன்றெய் தினும்பிற வுண்டா மெளிதே. ௭௪௩
ஒன்று மிலாது நன்றுற லரிது. ௭௪௪
அவைபெரு மன்னர்க் கரியன வல்ல. ௭௪௫
அவருளங் கொளச்சொலி னவரவை யளிப்பர். ௭௪௬
அவரையோர் தந்தையா வறிந்திட வுடன்படல்; ௭௪௭
அவர்பின் வேண்டுவ ளித்திட வுடன்படல்; ௭௪௮
அவரது பகையை யழித்திட வுடன்படல்; ௭௪௯
பிறவுமொத் தியைவன பெற்றெலாம் பெருக்குக. ௭௫0

௭௬-ம் அதி.–நாடு.

நாடு நாடுவ நல்குநா னிலத்தது. ௭௫௧
மலைகாடு வயல்கடல் மருவிய நானிலம். ௭௫௨
அவை குறிஞ்சி முல்லை மருத நெய்தல். ௭௫௩
அவைபல வுயிருணா மரமுதற் றாங்கும். ௭௫௪
ஒருமொழி வழங்குவ தொருதனி நாடு. ௭௫௫
ஒருபெருங் கண்டத் துறுவவக நாடு. ௭௫௬
பிறபெருங் கண்டத் துறுவபுற நாடு. ௭௫௭
பெருங்கடன் மலையாற் பிரிவது கண்டம். ௭௫௮
கடலுந் தீவுமயற் கண்டமொடு சேரும். ௭௫௯
பலபெருங் கண்டமு முலகெனப் படுமே. ௭௬0


40