பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௧0௯-ம் அதி.–முறை செய்தல்.

குடியது குற்றமன் கடிவது முறையாம். ௧0௮௧
கடியு மியலதன் காரணம் போக்கல்; ௧0௮௨
காரணம் போம்வரை காப்பினுள் வைத்தல். ௧0௮௩
எதற்குமோர் வகையறி விலாமையே காரணம். ௧0௮௪
செய்ததைச் செய்ய விடாமையே காப்பு. ௧0௮௫
இவையே யறமுறை நவையே பிறவெலாம். ௧0௮௬
முறைகண் ணோடா துயிர்வௌவ லென்ப. ௧0௮௭
அம்முறை யழிவுறு மரசுசெய் மறமுறை. ௧0௮௮
களையறி யாமை நிலங்குடி யொக்கும். ௧0௮௯
களையோ களையுடை நிலமோ களைவது. ௧0௯0

௧௧0-ம் அதி.–அறம் புரிதல்.

அறமன் னுயிர்த்துய ரறுக்கு நல்வினை. ௧0௯௧
அவ்வினை யுயிர்தொறும் வெவ்வே றாகும். ௧0௯௨
அவையுடன் கண்டுநன் காற்றுதன் மன்கடன். ௧0௯௩
துயர்முத லுயிர்க்கெலாந் துப்புர விலாமை; ௧0௯௪
அதனத னிடத்ததை யமர்த்திவை யாமை; ௧0௯௫
ஆறறி வினர்க்குநல் லறிவில் லாமை. ௧0௯௬
உயிரெலா மதனத னுணவுற வோம்புக. ௧0௯௭
அதனத னெல்லையு ளமர்த்திவைத் தாளுக. ௧0௯௮
ஆறறி வினர்க்குநல் லறிவெலாம் வழங்குக. ௧0௯௯
அறவிரி திருக்குற ளாதியா லறிக. ௧௧00

அரசியல் முற்றிற்று.

57

8