பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

அந்தணரியல்.

௧௧௧-ம் அதி.–அந்தண ரியல்பு.

அந்தண ரறத்தோடு செந்தண்மை பூண்டவர். ௧௧0௧
மாணவர் தம்மையே வளர்க்கு மியல்பினர். ௧௧0௨
அடுத்தவர் தம்மையு மளிப்பவரில் வாழ்பவர். ௧௧0௩
அரசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத்தினர். ௧௧0௪
அனைத்துயிர் தம்மையு மளிப்பவ ரந்தணர். ௧௧0௫
முதன்முந் நிலையினர் முகைமலர் காயனர். ௧௧0௬
அந்தணர் மெய்ந்நிலை யடைந்தவர் கனிவிதை. ௧௧0௭
விதையே மரமிலை மென்முகை யாதியாம். ௧௧0௮
மெய்யே யுலகுயி ரைந்நிலை யினராம். ௧௧0௯
முறைமுகை விதையா முதனிலை யுயிர்மெயாம். ௧௧௧0

௧௧௨-ம் அதி.–அந்தண ரொழுக்கம்.

ஓதலி னந்தணர்க் கொழுக்கநன் றென்ப. ௧௧௧௧
அந்தணர்க் கொழுக்க மனற்குச் சூடுபோன்ம். ௧௧௧௨
ஒழுக்கமு மறிவு முடனிகழ் தகைமைய. ௧௧௧௩
ஒன்றின் றெனின்மற் றதுவு மிலதாம். ௧௧௧௪
ஞானச் சொல்லெலாங் கானற் சலமாம். ௧௧௧௫
ஒழுக்க மறிதற் குரைகலின் றென்ப. ௧௧௧௬
பகுத்தறி வறநூ லுகுத்தவ ரேயவர். ௧௧௧௭
ஒழுக்கமெவ் வுயிர்க்கு மூறுசெய் யாமை. ௧௧௧௮
இயலு நன்றெலா மிடைவிடா தியற்றல். ௧௧௧௯
இழுக்கமிவ் விரண்டிலொன் றியற்றத் தவறல். ௧௧௨0


58