பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தணரியல்.

௧௧௩-ம் அதி.–கூடா வொழுக்கம்.

சாமிக ளுட்பலர் காமிக ளாயினர். ௧௧௨௧
தேசிக ருட்பல ராசின ராயினர். ௧௧௨௨
மகந்துக ளுட்பல ரிகந்தன ரொழுக்கம். ௧௧௨௩
தம்பிரான் மறமெலா மெம்பிரா னறிவர். ௧௧௨௪
போலியந் தணர்பலர் புரியா மறமிலை. ௧௧௨௫
அரசரு ளுளர்மறங் கரவினி லாள்பவர். ௧௧௨௬
இல்வாழ் வினருளும் புல்வாழ் வினருளர். ௧௧௨௭
மாணவ ருளுமுளர் கோணல் கொண்டவர். ௧௧௨௮
உலக மென்றுநல் லொழுக்கங் கொள்ளும்? ௧௧௨௯
உள்ளும் புறமு மோரியல் பூணும்? ௧௧௩0

௧௧௪-ம் அதி.–மானங் காத்தல்.

மானமென் பதுதம் மதிப்பை விடாமை; ௧௧௩௧
தத்தந் நிலைக்குத் தாழ்ந்தசெய் யாமை; ௧௧௩௨
தத்த மியற்குத் தக்கவா றொழுகல். ௧௧௩௩
மானொரு மயிரற மாயுமவ் விடத்தே. ௧௧௩௪
மனிதர்தம் மதிப்பற வாழ்ந்திடல் வியப்பே. ௧௧௩௫
மாணவ ரிழுக்கலின் மடித னன்றே. ௧௧௩௬
இல்லின ரிவறலி னிறத்த னன்றே. ௧௧௩௭
அரசறஞ் செயாமையி னழித னன்றே; ௧௧௩௮
தாழ்ந்தார்த் தெறுதலிற் சாத னன்றே. ௧௧௩௯
அந்தணர் வெகுளலி னழற்புக னன்றே. ௧௧௪0


59