மெய்யறம்
௧௧௫-ம் அதி.–வெஃகாமை.
வெஃகுதல் பிறர்பொருள் விரும்புங் குற்றம்.
௧௧௪௧
வெஃகலை மறத்தின் வித்தென மொழிப.
௧௧௪௨
அதுதீ யவாவி னங்குர மாகும்;
௧௧௪௩
காமமுங் களவுங் கலிதழை யிலைவிடும்;
௧௧௪௪
கொலையும் பொய்யுமாங் கொம்பொடு கிளைவிடும்;
௧௧௪௫
அழிதகு மறங்களா மரும்பொடு மலர்விடும்;
௧௧௪௬
பழியுங் கேடுமா மழியாக் காய்தரும்;
௧௧௪௭
அழிபல நிரயக் கழிபெருங் கனிதரும்;
௧௧௪௮
பொறிவழித் துன்பமாஞ் செறிபல சுவையாம்.
௧௧௪௯
ஆதலால் வெஃகலை யறவே விடுக.
௧௧௫0
௧௧௬-ம் அதி.–வெகுளாமை.
வெகுளி யகத்தெழும் வெங்கனற் சுடரே.
௧௧௫௧
இச்சுடர் தம்மையு மினத்தையு மழிக்கும்;
௧௧௫௨
நகையை யுவகையைத் தகையைக் கொல்லும்;
௧௧௫௩
பகையைச் சொல்லரும் வகையில் வளர்க்கும்;
௧௧௫௪
மிகையுந் துயரு மிகுந்திடச் செய்யும்;
௧௧௫௫
வெகுளியை விடற்கவ் விருப்பமுட் கொள்ளுக;
௧௧௫௬
வெகுளியுள் ளெழுங்கா னகுதலேபுரிக;
௧௧௫௭
வெகுளியின் கேடெலாம் விரைந்துட னெண்ணுக;
௧௧௫௮
ஆடிகொண் டுடன்முக வழகினை நோக்குக.
௧௧௫௯
வெகுளியை யடுதலே தகுதியென் றடுக.
௧௧௬0
60