பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தணரியல்.

௧௧௭-ம் அதி.–இன்னா செய்யாமை.

மன்னுயி ருளமுடல் வருத்துவ வின்னா. ௧௧௬௧
அவைதீச் செயலே யச்சொலே நினைப்பே. ௧௧௬௨
கொடியது செயலுட் கொலையென மொழிப. ௧௧௬௩
கொலையினு மிந்தியங் களைவது கொடியது. ௧௧௬௪
அவைகெட வதைசெய லதனினுங் கொடியது. ௧௧௬௫
கொடியவை சொல்லுட் குறளைபொய் நிந்தை. ௧௧௬௬
கொடியவை நினைப்புட் கொலைமுத னினைப்பு. ௧௧௬௭
இன்னா செய்தார்க் கின்னா வந்துறும். ௧௧௬௮
ஒன்றொரு கோடியாய் பின்றைநாள் வந்துறும். ௧௧௬௯
உற்றவுயி ரறிவள வுறுத்தும் நிற்கும். ௧௧௭0

௧௧௮-ம் அதி.–தவஞ் செய்தல்.

தவமென் பதுதனைச் சார்ந்தநோய் பொறுத்தல்; ௧௧௭௧
உணர்வுடை யுயிர்கட் கூறுசெய் யாமை; ௧௧௭௨
கைந்நிலை விடாது மெய்ந்நிலை யுள்ளல்; ௧௧௭௩
மனத்தை யடக்கி வசஞ்செய முயறல்; ௧௧௭௪
அதற்கின்றி யமையா வப்பியா சங்கள். ௧௧௭௫
தவஞ்செய லொன்றே தஞ்செய லென்ப. ௧௧௭௬
தவத்தி னளவே தனமுறு மென்ப. ௧௧௭௭
தவமுடித் தாரே சமனைக் கடப்பர். ௧௧௭௮
தவமே யிகபரந் தருநன் முயற்சி. ௧௧௭௯
தவமே யியற்றுக தகவுற வேண்டுவர். ௧௧௮0


61