பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௧௧௯-ம் அதி.–துற வடைதல்.

துறவியா னெனதெனு முறவினை யொழித்தல்; ௧௧௮௧
மன்னுயி ரெல்லாந் தன்னுயி ரென்றல்; ௧௧௮௨
தன்பொருண் மன்னுயிர் தமதென வாழல். ௧௧௮௩
துறவென விவ்வகத் துறவையே மொழிப. ௧௧௮௪
புறத்துற வெல்லாம் பொய்த்துற வாமே. ௧௧௮௫
துறவந் தணருக் குறவொழுக் கன்றோ? ௧௧௮௬
தாய்தந் தையரைத் தள்ளலுந் தண்மையோ? ௧௧௮௭
தன்னுயிர்த் துணையைத் தவிர்தலுந் தண்மையோ? ௧௧௮௮
தீயவா மிவையெலாம் பேயா டுறவே. ௧௧௮௯
தமரையே யளியார் பிறவுயி ரளிப்பரோ? ௧௧௯0

௧௨0-ம் அதி.–அருள் புரிதல்.

அருள்பல வுயிர்க்கு மன்புபா ராட்டல். ௧௧௯௧
உயிரெலா மெய்யது பயிரெனக் காண்க. ௧௧௯௨
எவ்வகை யுயிர்க்கு மின்னா செயற்க. ௧௧௯௩
அவற்றிற் காவன வனைத்து முதவுக. ௧௧௯௪
தமையவை வருத்தினு மவைதமை யோம்புக. ௧௧௯௫
அருளுடை யார்மெய்ப் பொருளடை வதுதிடம். ௧௧௯௬
அருள்பே ணாருள மருண்மிகு முண்மை. ௧௧௯௭
சுயநயச் செயலரு ளினையற வோட்டும். ௧௧௯௮
பரநயச் செயலருள் பரவிடச் செய்யும். ௧௧௯௯
அருள்விடா தவரைமெய்ப் பொருள்விடா துண்மை. ௧௨00

அந்தண ரியல் முற்றிற்று.

62